Monday, December 26, 2011

ஓர் ஓசையற்ற பயணம்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

ஓர் ஓசையற்ற பயணம்

எழுதியவர்: அபூ அரீஜ்


காலம்: அனைத்து கிழமை நாட்களிலும்


பயணி பற்றிய விபரம்: -

தகுதியானோர் : ஆதமின் மகன்!


மூல உற்பத்தி : களிமண்!


விலாசம் : பூமியின் மேற்பகுதி!


பயணச் சீட்டு பற்றிய விபரம்: -


பயண வழி : ஒன்வே ஒன்லி (ஒற்றைப் பயணம் மட்டும், திரும்பும் சீட்டு கிடையாது)!


விலை : முற்றாக இலவசம்!


முற்பதிவு : ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது!


பொதி(சுமை) பற்றிய விபரம்: -


ஒவ்வொரு விமானத்திலும் ஒரு பயணி மட்டுமே அனுமதி!


கூடுதலாக 5 மீட்டர் வெள்ளைத் துணியும் சிறிய அளவு காட்டனும் எடுத்துக் கொள்ளலாம்!


பெறுமதி வாய்ந்த பொதி பற்றிய விபரம்: -


மனத்தூய்மையுடன் நிறைவேற்றப்பட்ட தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ், தர்மங்கள்,

சத்தியத்திற்காக செய்த தியாகங்கள்,குழந்தைகளை நல்லவர்களாக ஆக்க எடுத்துக் கொண்ட உண்மையான கரிசணைகள் மற்றும் இது போன்ற நற்காரியங்கள் மட்டும்.


பயணம் பற்றிய விபரம்: -


பயணத்தளம் : பூமியின் எந்தப் பகுதியுமாக இருக்கலாம்.


பயணிக்கும் நேரம் : மரணத்தைத் தொடர்ந்து!


இறங்கும் இடம் : மறு உலகம்.


குறிப்பு: பயணச் சீட்டு, கடவுச் சீட்டு, பிரயாண ஆவணங்கள் போன்ற எதுவும் தேவையில்லை. தயாராக மட்டும் இருந்து கொண்டால் போதுமானது!


தங்குமிட வசதி: -


தற்காலிகமாக மட்டும் ஏற்பாடு செய்யப்படும்!!


அறையின் அளவு : கிட்டத்தட்ட 2 அடி அகளமும் 6 அடி நீளமுமாகும்!


அறையின் சிறப்பம்சம் : வெரும் புழுதி மணலினாலும் சிறிய கற்களினாலும் அமைக்கப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது!


தங்குமிட வசதி பற்றிய விபரம் : பணக்காரனாக இருந்தாலும் ஏழையாக இருந்தாலும் ஒரே வகையான வசதி மட்டும்தான் ஏற்பாடு செய்யப்படும் என்பதை தயவு செய்து கவணத்திற் கொள்க!


கீழ்காணும் செளகரியங்கள் காணப்படும் :


குளிரூட்டி (ஏ.சி) : 0 டொன் !!!


நீர் விநியோகம் : கிடையாது !!!


மின் விநியோகம் : கிடையாது !!!


தொலை பேசி : கிடையாது !!!


டீ.வி மற்றும் சேனல்கள் : சுவனம் அல்லது நரகம் !!!


பத்திரிக்கைகள் அல்லது புத்தகஙகள் : கிடையாது !!!


ரூம் சர்விஸ் : அல்லாஹ்வுக்கு எந்தளவு கட்டுப்பட்டு நடந்தோம் என்பதைப் பொருத்து அமையும்!


முக்கிய கவணத்திற்கு : -

அனைத்து பயணிகளும் மேற் கூறப்பட்ட விடயங்கள் அனைத்தையும் தயவு செய்து கவணத்திற் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்!


பயணச் சீட்டு ரத்துச் செய்யப்படடுவதோ அல்லது பிறருக்கு மாற்றுவதோ முற்று முழுதாக தடை செய்யப்பட்டுள்ளது!


எனவே, தயவு செய்து அனைவரும் (விதிவிலக்கு கிடையவே கிடையாது) பயணத்திற்கு தயாராக இருந்து கொள்ளும் படி கேட்டுக் கொள்கின்றோம்.


மலக்குல் மெளத் எனப்படும் உயிரைக் கைப்பற்றும் வனவர் வந்தவுடன் பயணம் ஆரம்பமாகும் என்பதையும் அறியத்தருகின்றோம்!


மேலதிக தகவல்களுக்கு: -


உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அல்-குர்ஆன் மற்றும் ஸுன்னாவை படிக்கவும்.